Friday, 2 November 2012

என் அம்மாவுக்கு




நிலவின் முன்னிலையில் குழந்தைக்கு  உணவு ஊட்டி 
மகிழும் தாய் அமாவாசை அன்று 
வீட்டினுள்ளே இருந்து விட...
குழந்தை மட்டும் வெளியே ஓடி விட்டு 
உள்ளே வந்து மழலை மொழியில்...... 



"நீ நிலாச்சோறு ஊட்டி ஊட்டி 
நிலாவும் என்னை போல் வளந்ததம்மா....
நீ  வெளியே வராததால் 
ஏனோ அது கரைந்து  போயிடிச்சிம்மா....

எனக்கொரு அம்மா நீதானம்மா 
அவளுக்கு பாட்டி மட்டும்தானே அம்மா...
கன்னத்தில் எனக்கொரு முத்தமம்மா-பாவம் 
காற்றில் அவளுக்கு  ஒன்று தந்துடும்மா...

எனக்கு ஒரு வாய் சாதம் போதுமம்மா-மீதி  
எல்லாம் அவளுக்கு தந்திடலாம்மா...
தொட்டுக்க எதுவும் வேண்டாம்மா 
பாட்டி சுட்ட வடை இருக்குதாம்மா ....

வெளியே வந்து பாரம்மா
நீ வந்தால்தான் அதுவும் வருமாம்மா..."


Thursday, 25 October 2012

தோழி

உயிர்  தோழியே !
உன் சிரிப்பை  காண தானே
காத்து கொண்டு   நிற்கிறேன்
ஆறேழு நாளாக
காணாமல் தவிக்கிறேன்
நீ வரும் வழியை நோக்கி 
விழியை வைக்கிறேன்
உன் திட்டு இல்லாமல்
தூக்கம் வராமல் நடு இரவினில்  விழிக்கிறேன்
தாயைப் போல தோழியை
இதயத்தில் சுமக்கிறேன்
காலம் போக போக
கைக்குட்டையை  நனைத்துக் கொண்டு இருக்கிறேன் ...
♥♥♥miss you my dear friend♥♥♥
(நண்பனுக்காக எழுதி தந்தது )

Wednesday, 24 October 2012

படத்திற்க்கு ஏற்ற வரிகள் எழுத நண்பர் Karrthik Kind Heartedயின் போட்டி...............

Tuesday, 23 October 2012

உன்னில் நான் (சிறுப் பகுதி )

உன் காதோடு வாரிய
கூந்தல் நான்தான்
அடங்காமல்  பறக்கிறதே 
முகத்திலே அலையும் தானாய் 
உதட்டோரம் வருகிறதே..  



உன் கையிலே
அழகு நான்தான் 
விரல் நகமாய் 
வெட்டிட இல்லை 
வைர மங்கையின் கையில் 
தங்க மோதிரமாய் நானும் 
கை கோர்ந்தே என்றும் இருக்க....




உன் கண்ணிலே 
அழகு நான்தான் 
அழுகையிலே மையாய் 
கரைந்திட இல்லை 
கண்ணிமையாய் இருந்திட வேண்டும்
உன் கண்ணீரை கட்டிப் போட.... 

உயிரில்லா உறவுகள்.. (சிறுப் பகுதி )

நீ முகம் பார்க்கும் கண்ணாடிக்கு மட்டும் 
கண் இருந்திருந்தால்
கண்டிப்பாக கண்ணீர் விட்டிருக்கும்
எத்தனை முறை உன்னை ரசிப்பதில்
என்னிடம் தோற்றிருக்கும்

உன் காதணிக்கு மட்டும்
காது இருந்திருந்தால்
கண்டிப்பாக என்னை  காதலித்திருக்கும்
எத்தனை முறை என் காதலை சொல்லும்போது
உன் காதருகே அது கேட்டிருக்கும்

  

Monday, 22 October 2012

மழையில் நான்

பாண்டிச்சேரிக் கடற்கரையில் தூறும் மழையில்
ஒரு  கையில் குடையுடன்  
மறுக்கையில் காரக் கடலையுடன்
இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு  நான் ....... . ( சிறுப் பகுதி ) 


கருத்த மேகம் 
சிவந்த  பெண்கள் 
ஈரமான கூந்தல் 
ஈரமாகாத இதழ்கள்  
தூறும் மழை 
துடிக்கும் அலை 
இனிக்கும் மனசு 
காரும் உதடு 
சிரிக்கும் காற்று 
சிலிர்க்கும் இளைஞர்

இடியில் பாடும் 
இளையராஜா பாடல்

தனிமையில் நான்
நினைவினில் நண்பர்கள்
கலங்கா மழை நீர்
கலங்கிய கண்ணீர்   
கையில் குடை 
நனைந்த இதயம்..........
......................................................... மதன் ஹிமாத்ரி   :-) .............     ☺♥

Wednesday, 29 August 2012

இனிப்பு


நீ கடித்துத் தந்த சாக்லேட்டை
எச்சில் துடைத்து விட்டு தின்றேன் 
இனிப்பிழந்து இருக்கிறது சாக்லேட்....
 

Saturday, 25 August 2012

காதலியின் (மனைவியின்) கால்களில் காதல்



எப்போதும் தலை குனிந்தே நடக்காதே
உன் நெற்றிப்  பொட்டை பார்த்து 
காதல் கொள்ள போகிறது கால் மெட்டி


கோலம்



நீ வாசலில் புள்ளி வைக்கும்போதே  உன் மீது
கோலம் போடுகின்றன என்  கண்கள் 

Friday, 24 August 2012

மொழிகளின் ஏக்கம்


உன்னைப் பற்றி ஆங்கிலத்தில்  கவிதை எழுத முயன்றேன்
அழகை  வர்ணிக்க வார்த்தைகளின்றி  அலைகிறது ஆங்கிலம்
வாய்ப்பை  இழந்ததால் அழுகிறது தமிழ்..... 

Thursday, 23 August 2012

என் மாமி(யார்?)



நீ தொட்ட key board-i  தொடும்போது
மருந்து தின்ற  mouse ஆக துடிக்கும் என் மனதின் monitor இல்
உன்  மம்மி தெரியும் போது மட்டும்
உன்னை நினைக்கும் என் இதயம்
shutdown ஆன CPU ஆக நின்று விடுகிறது  

Thursday, 16 August 2012

தண்டனை

எத்தனை அடிகள் வேண்டுமானாலும் சரி 
என் கன்னத்தில் அடி 
ஏற்றுக் கொள்கிறேன் 
உன்  ஆயுதம்  உன் உதடுகளெனில்.....  

Saturday, 30 June 2012

விதி

நீ செடியை பிடுங்கினாலும் கவலை இல்லையாம்... 
இலையும் பூவும் பார்த்த உன் முகத்தை காண வரம் வாங்கியதாய் எண்ணி விதியை முடித்துக்கொள்கின்றன வேர்கள்....

உன் கால் கொலுசு

நீ என் அருகில் வரும்போது அமைதியாக இருக்கும் உன் கால்கொலுசு
நீ என்னைவிட்டு வேகமாக விலகும்போது மட்டும் சப்தமாக
என்னை ஏளனம் செய்கிறதே!!!

உன் கோவம்

கோவம் வந்தால்தான் மூக்கின் மேல் வியர்க்கும் என்றால் உன் மூக்குத்தி குளிப்பதே இல்லையா?