Tuesday, 23 October 2012

உயிரில்லா உறவுகள்.. (சிறுப் பகுதி )

நீ முகம் பார்க்கும் கண்ணாடிக்கு மட்டும் 
கண் இருந்திருந்தால்
கண்டிப்பாக கண்ணீர் விட்டிருக்கும்
எத்தனை முறை உன்னை ரசிப்பதில்
என்னிடம் தோற்றிருக்கும்

உன் காதணிக்கு மட்டும்
காது இருந்திருந்தால்
கண்டிப்பாக என்னை  காதலித்திருக்கும்
எத்தனை முறை என் காதலை சொல்லும்போது
உன் காதருகே அது கேட்டிருக்கும்

  

No comments: