எல்லா பிரச்சனைகளையும் விட்டுவிட்டு பார்த்தால் சத்குரு போன்ற ஆட்கள் நம் சமுதாயத்திற்கு தேவை. அவருடைய கருத்துக்களும் யோகா மீதான பார்வையும் கண்டிப்பாக நம் நாட்டின் இளைய சமுதாயத்திற்கும் தேவைதான். நமோவிற்க்காக அவரை ஆதரிப்பதும் நமோ ஆதரிக்கிறார் என்பதால் ஒரு பிரிவினர் எதிர்ப்பதும் தேவை இல்லாதது. காட்டை அழிக்கும்போது அமைதியாக இருந்தோம். நமோ வரும்போதுதான் நமக்கு காடு எரியும் வாசம் தெரிகின்றது. சென்ற வருடம் இதே நாள் இதே ஆதரவாளர்கள் அவ்வளவு ஆரவாரம் செய்யவில்லை. அப்போது இவ்வளவு எதிர்ப்பு இல்லை. அப்போது "ஆதியோகி" "அயோகி" ஆகவில்லை. கண்மூடித்தனமான ஆதரவும் எதிர்ப்பும் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்லதல்ல என்பதை எப்போது புரிந்துகொள்கின்றோமோ அப்போதுதான் வெறுப்பு விருப்பு இல்லாத உலகம் அமையும். இதையே தான் இந்துத்துவாவும் கிருத்துவமும் இஸ்லாமும் சொல்கின்றது...
"மதங்களை அழித்துவிட்டால் நாடும் உலகமும் நன்றாக இருக்கும்" என்று எனக்கு தோன்றவில்லை. மனிதனை நல்வழி படுத்தும் இந்த மதங்கள் தேவைதான். சாதிகள் தான் வேண்டாம். எந்த மதமாக இருந்தாலும் மற்றவர்களை புண்படுத்த சொல்லித்தருவதில்லை. இப்போது உலகில் நடக்கும் மதரீதியான பிரச்சனைகளுக்கு காரணம் ஒன்றே ஒன்றுதான் தன் மதக்கருத்தை ஒழுங்காக படிக்காமல் மற்றவரின் மதத்தினை அசிங்கப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவதே அது. இது மனிதமே இல்லை. மனிதத்தை சொல்லித்தராத மதம் என்று ஒன்றுமில்லை. மனிதத்தை சொல்லித்தரவில்லை என்றால் அது மதமே இல்லை அதற்கு பெயர் தீவிரவாதம். மனதை கொன்றாலும் மனிதனை கொன்றாலும் எல்லாம் தீவிரவாதம்தான். எந்தமதத்தின் கருத்தையும் பின்பற்றுவோம் மனிதத்தை காப்போம்.
💓💝அன்பே சிவம்💝💓 3
No comments:
Post a Comment